செய்திகள்
அபராதம்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 64 பேருக்கு அபராதம்

Published On 2021-04-16 11:56 GMT   |   Update On 2021-04-16 11:56 GMT
குன்னம் தாலுகாவில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

குன்னம் தாலுகாவில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த மாதம் 8-ந் தேதி முதல் இந்த மாதம் 14-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய 64 பேருக்கு ரூ.14 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News