செய்திகள்
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் குடும்பபிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகில் உள்ள கல்வார்பட்டி ஊராட்சி கருதிகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தீனா(20). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரும், கீர்த்தனா(18) என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒருவயதில் பெண்குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருவீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கணவர் சத்தம்போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் தனது பாட்டி வீட்டிற்கு வந்த கீர்த்தனா அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வேடசந்தூர் அருகில் உள்ள கல்வார்பட்டி ஊராட்சி கருதிகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தீனா(20). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரும், கீர்த்தனா(18) என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒருவயதில் பெண்குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருவீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கணவர் சத்தம்போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் தனது பாட்டி வீட்டிற்கு வந்த கீர்த்தனா அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.