செய்திகள்
கடமலைக்குண்டுவில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
கடமலைக்குண்டுவில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வக்குமார் (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். தனது உறவினரான செல்வம் என்பவருடன் தோட்டத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது வருசநாடு பகுதியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற செல்வக்குமார் மீது மோதியது.
மேலும் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த ஆத்தியப்பன் (வயது 65) என்பவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்தியப்பன் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வக்குமார் (வயது 15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். தனது உறவினரான செல்வம் என்பவருடன் தோட்டத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது வருசநாடு பகுதியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற செல்வக்குமார் மீது மோதியது.
மேலும் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த ஆத்தியப்பன் (வயது 65) என்பவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்தியப்பன் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.