செய்திகள்
மழை

குமரி மாவட்டத்தில் அணை பகுதிகளில் மழை நீடிப்பு

Published On 2021-04-12 10:14 GMT   |   Update On 2021-04-12 10:14 GMT
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் வருகிறது.

நாகர்கோவில்:

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. மேற்கு மாவட்ட பகுதியில் பரவலாக பெய்த மழை கிழக்கு மாவட்ட பகுதியில் ஓரிரு இடங்களில் மட்டும் கொட்டியது.

நேற்றும் இதுபோல மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மேலும் நாகர்கோவில் நகர் பகுதியிலும் நேற்று சாரல் மழை பெய்தது. அதிக பட்சமாக கோழிப்போர் விளையில் 52 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பூதப்பாண்டி - 10.2, களியல் - 10, கன்னிமார் - 4.8, குழித்துறை - 42, பெருஞ்சாணி - 13, புத்தன் அணை - 11.8, சுருளோடு - 2, தக்கலை - 4, இரணியல் - 6.4, மாம்பழத்துறையாறு - 5, ஆரல்வாய்மொழி - 11, அடையாமடை - 11, குருந்தன்கோடு - 21, முள்ளங்கினாவிளை - 18, ஆனைகிடங்கு - 4.2, முக்கடல் அணை-16

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் வருகிறது.

அணையின் நீர் மட்டம் 39.25 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 52.36 அடியாக உள்ளது. சிற்றார் 1 அணையின் நீர் மட்டம் 5.54 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர் மட்டம் 5.64 அடியாகவும் உள்ளது.

பொய்கை அணையின் நீர் மட்டம் 18.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 14.68 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர் மட்டம் 4.9 அடியாக உள்ளது.

Tags:    

Similar News