செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் 2,124 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2021-04-11 15:57 GMT   |   Update On 2021-04-11 15:57 GMT
தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 2,124 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது 41,955 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2,314 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 20
செங்கல்பட்டு - 631
சென்னை - 2,124
கோவை - 617
கடலூர் - 97
தர்மபுரி - 44
திண்டுக்கல் - 81
ஈரோடு - 119
கள்ளக்குறிச்சி - 44
காஞ்சிபுரம் - 206
கன்னியாகுமரி - 93
கரூர் - 38
கிருஷ்ணகிரி - 132
மதுரை - 173
நாகை - 159
நாமக்கல் - 85
நீலகிரி - 36
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 40
ராமநாதபுரம் - 21
ராணிப்பேட்டை - 88
சேலம் - 128
சிவகங்கை - 63
தென்காசி - 28
தஞ்சாவூர் - 178
தேனி - 45
திருப்பத்தூர் - 31
திருவள்ளூர் - 296
திருவண்ணாமலை - 74
திருவாரூர் - 100
தூத்துக்குடி - 149
திருநெல்வேலி - 144
திருப்பூர் - 177
திருச்சி - 154
வேலூர் - 90
விழுப்புரம் - 60
விருதுநகர் - 44

மொத்தம் - 6,618
Tags:    

Similar News