செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஊராட்சி தலைவர் உள்பட 40 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-11 14:18 GMT   |   Update On 2021-04-11 14:18 GMT
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் புதுமடம் ஊராட்சியில் பணியாற்றும் 100 நாட்கள் வேலை செய்யும் பணியாளர்கள், ஊராட்சி தலைவர் காமில் உசேன் உள்பட 40 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

புதுமடம் மருத்துவ அலுவலர் ஜோஸ்லின் சைனி, செவிலியர் ருக்மணி ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுமடம் ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் செய்திருந்தார்.
Tags:    

Similar News