செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,070 ஆக உயர்வு

Published On 2021-04-10 14:20 GMT   |   Update On 2021-04-10 14:20 GMT
கோவை மாவட்டத்தில் 57,982 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 3,389 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை:

கோவை மாவட்டத்தில் இரண்டாவது அலையாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று 473 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,070 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 699 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 142 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை கோவை மாவட்டத்தில் 57,982 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 3,389 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News