செய்திகள்
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
ராணிப்பேட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் குமரன் என்ற அப்பு (வயது 27). இவர் நேற்று ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார். காரை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அருகே வரும்போது, ரோந்து பணியில் இருந்த ராணிப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.