பாபநாசம் அருகே தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்- ஜே.சி.பி. ஓட்டுநர் கைது
பாபநாசம்:
பாபநாசம் அருகே ராஜகிரி மெயின்ரோட்டில் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் முன்னால் ராஜகிரியை சேர்ந்த விஜய் (வயது21) ஜேசிபி எந்திரத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் வழிவிடுமாறு கேட்டுள்ளார்.
இதனால் விஜய், தனியார் பஸ் ஓட்டுநர் திருப்பாலத்துறையை சேர்ந்த சுரேஷ்(39), கண்டக்டர் சதீஷ்குமார்(30) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூருக்கு பஸ் சென்றுவிட்டு, திரும்பி வரும்போது சுரேஷ் ராஜகிரியில் பஸ்சை வழிமறித்து டிரைவர் சுரேஷ், கண்டக்டர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராணி, சிவகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.