செய்திகள்
நகை பறிப்பு

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-04-09 08:55 GMT   |   Update On 2021-04-09 08:55 GMT
வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
மதுரை:

மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News