செய்திகள்
மதிமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால் மதிமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால், கட்சியின் தணிக்கைக் குழு உறுப்பினர் எம்.கார்கண்ணன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் நாகநாதன் நாச்சியப்பன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.சேகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்.திருநாவுக்கரசு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.செல்வராஜ் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால், கட்சியின் தணிக்கைக் குழு உறுப்பினர் எம்.கார்கண்ணன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் நாகநாதன் நாச்சியப்பன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.சேகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்.திருநாவுக்கரசு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.செல்வராஜ் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.