செய்திகள்
வழக்கு பதிவு

வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்த 4 பேர் மீது வழக்கு

Published On 2021-04-07 09:41 GMT   |   Update On 2021-04-07 09:41 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் வாக்குப்பதிவு மையம் அருகே 100 மீட்டருக்குள் நின்று கொண்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க. கிளை செயலாளர் பெரியசாமி உள்பட 4 பேரை அரும்பாவூர் போலீசார் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
Tags:    

Similar News