செய்திகள்
கைது

கோட்டூர் அருகே வாலிபரை பீர்பாட்டிலால் குத்தியவர் கைது

Published On 2021-04-07 09:40 GMT   |   Update On 2021-04-07 09:40 GMT
கோட்டூர் அருகே வாலிபரை பீர்பாட்டிலால் குத்தியவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்:

கோட்டூர் அருகே கீழபனையூர் பலாத்தோப்பில் செட்டியமூலை தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜீ (வயது32), சுரேஷ் (37), மாதவன் (32). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலால் ராஜீவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ராஜீவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் ராஜீ கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News