செய்திகள்
கைது

சாலியமங்கலம் பகுதியில் மதுவிற்ற 4 பேர் கைது

Published On 2021-04-05 14:56 GMT   |   Update On 2021-04-05 14:56 GMT
சாலியமங்கலம் பகுதியில் மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 405 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சாலியமங்கலம்:

தஞ்சையை அடுத்துள்ள சாலியமங்கலம் பகுதியில் அம்மாப்பேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல ெரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பூண்டி பெரியார் நகரை சேர்ந்த கலைவாணன்(வயது52) என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார், கலைவாணனை கைது செய்து அவரிடம் இருந்த 27 மது பாட்டில்கள், ரூ.370 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் புத்தூர் பாசன வாய்க்கால் கரை பகுதியில் மதுவிற்ற சாலியமங்கலம் மன்னன்தெருவை சேர்ந்த சங்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 39 மது பாட்டில்கள், ரூ.530 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பூண்டி தண்ணீர் பந்தல் பகுதியில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பூண்டித்தோப்பு தெற்குத்தெருவை சேர்ந்த இளங்கோவன் (42) என்பதும், அவர் மதுவிற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இளங்கோவனை கைது செய்து, அவரிடம் இருந்த 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பாக்குளம் வடகரை பகுதியில் மது விற்ற ஒரத்தநாடு தாலுகா அரசப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த மனோகரனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 195 மது பாட்டில்களையும், ரூ.3,510 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி - கந்தர்வக்கோட்டை சாலை பகுதியில் நேற்று செங்கிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வளம்பக்குடியை சேர்ந்த ரவி்(வயது51) என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News