செய்திகள்
கோப்பு படம்.

வளநாடு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2021-04-04 17:10 GMT   |   Update On 2021-04-04 17:10 GMT
வளநாடு அருகே குளக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவரங்குறிச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் குனியாப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார்(வயது 23), தனது உறவினர் முத்துசாமியுடன் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வரும் வழியில் திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த ஊனையூர் அருகே உள்ள நடுவிப்பட்டியில் உள்ள குளத்தில் இருவரும் குளிக்க சென்றனர். அப்போது நந்தகுமார் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி பலியானார். 

வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News