செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

விபத்தில் 3 அதிமுகவினர் மரணம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

Published On 2021-03-31 08:40 GMT   |   Update On 2021-03-31 08:40 GMT
அ.தி.மு.க.வினர் 3 பேர் விபத்தில் மரணமடைந்ததையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், வடக்கு வெள்ளியம்பாளையம் காலனியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் கார் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் கழக உடன்பிறப்புகளான ஆறுமுகம், கண்ணம்மாள் பழனிசாமி மரணம் அடைந்து விட்டார்கள்.

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி கேட்டும் மிகுந்த மனதுயரம் அடைந்தோம்.

அகால மரணம் அடைந்தவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலன் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News