செய்திகள்
பாளையில் தொழிலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சீவலப்பேரி அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது65). இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வேலைக்கு சென்ற அவர் இரவு வெகுநேர மாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை துரைராஜ் அங்குள்ள வயலில் பிணமாக கிடந்தார். அவரது கையில் மின்சாரம் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வயல் பகுதியில் மின்சார வயர்கள் இல்லை. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.