செய்திகள்
ஏவ வேலு

எ.வ.வேலு ரூ.25 கோடி வருவாய் மறைத்தது கண்டுபிடிப்பு

Published On 2021-03-30 02:53 GMT   |   Update On 2021-03-30 02:53 GMT
திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்லூரிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.25 கோடி வருவாய் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளருமான எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்லூரி மற்றும் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த அறை உள்பட 18 இடங்களில் சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது, எ.வ.வேலு பயன்படுத்திய முக்கிய டைரி சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் அவரது வரவு, செலவு குறித்த தகவலை அதிகாரிகள் எடுத்துள்ளனர். டைரியில் இருந்த தகவலின் அடிப்படையில், கரூர் பைனான்சியர் அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத, ரூ.3 கோடிக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி ரூபாய்க்கு அதிகமான வருவாய் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, குடும்பத்தினர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும், கரூரில் பைனான்சியர் ஒருவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் காட்டப்படாத, ரூ.3.70 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அறக்கட்டளையின் வரவு செலவுகளை ஆய்வு செய்ததில், அறக்கட்டளை வருவாய், கல்லூரி கட்டண வசூல் போன்றவற்றை குறைத்து காட்டியது தெரிய வந்துள்ளது. இதன் வாயிலாக, ரூ.25 கோடி வருவாய் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News