செய்திகள்
பணம் பறிப்பு

பஸ்சுக்காக காத்திருந்த வாலிபரிடம் நகை-பணம் பறிப்பு

Published On 2021-03-28 11:25 GMT   |   Update On 2021-03-28 11:25 GMT
பஸ்சுக்காக காத்திருந்த வாலிபரிடம் நகை-பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 34 ). இவர் நேற்று நெல்லைக்கு வந்து விட்டு பின்னர் மீண்டும் ஊர் செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் பேச்சிமுத்துவிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து அவர் பாளை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News