செய்திகள்
ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு இதுதான் காரணம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

Published On 2021-03-26 05:07 GMT   |   Update On 2021-03-26 05:07 GMT
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை ராஜீவ்காந்திர அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம்.

* DOUBLE MUTANT கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை.

* தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960- ல் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.

* பரிசோதனைகளை அதிகரிக்க உள்தால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டக்கூடும்.

* தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News