செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 61 ஆயிரத்து 134, 2 கிலோ 294 கிராம் தங்கம், 3 கிலோ 829 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.
சமயபுரம் :
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தமாதம் இரண்டாவது முறையாக கோவில் இணை ஆணையர் கல்யாணி, உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன் மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 61 ஆயிரத்து 134, 2 கிலோ 294 கிராம் தங்கம், 3 கிலோ 829 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தமாதம் இரண்டாவது முறையாக கோவில் இணை ஆணையர் கல்யாணி, உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன் மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 61 ஆயிரத்து 134, 2 கிலோ 294 கிராம் தங்கம், 3 கிலோ 829 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.