செய்திகள்
கோப்புபடம்

மதுக்கூர் அருகே அரசு அலுவலக டிரைவருக்கு கொலை மிரட்டல் - 2 பேர் கைது

Published On 2021-03-21 11:43 GMT   |   Update On 2021-03-21 11:43 GMT
மதுக்கூர் அருகே அரசு அலுவலக டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் செபாஸ்டின் (வயது 47) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு தேர்தல் பணிபுரிந்து வரும் 2 பெண் ஊழியர்களை இரவு நேரமாகிவிட்டதால் அவர்களை மதுக்கூர் அருகே மோகூரில் உள்ள அவர்களது வீட்டில் விட்டு வருமாறு செபாஸ்டினிடம், சப்-கலெக்டர் கூறினார்.

இதையடுத்து அந்த 2 பெண்களையும் காரில் ஏற்றி கொண்டு அவர்களது வீட்டில் விட்டார். பின்னர் அதே காரில் திரும்பி கொண்டிருந்தார்.

மோகூர் அருகே வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறிறுத்து நிறுத்தினர்.

பின்னர் நீ மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.வின் கணவர் தானே என கூறி செபாஸ்டினிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து மோகூரை சேர்ந்த நல்லப்பன் மகன் கோபால் (30) மற்றும் பொன்னுசாமி மகன் கோபால் (40) ஆகிய 2 பேரை கைது செய்தார். மற்ற 2 பேரை தேடி வருகிறார்.


Tags:    

Similar News