செய்திகள்
நன்னிலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
நன்னிலம் அருகே குடல்இறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள வடகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சூரியமூர்த்தி(வயது76). இவர் குடல்இறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவருக்கு தீராத வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் சூரியமூர்த்தி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.