செய்திகள்
நிலக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி கார்த்திகா (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திகா மேற்கூரையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக கார்த்திகாவின் உடலை எடுத்து நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி கார்த்திகா (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திகா மேற்கூரையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக கார்த்திகாவின் உடலை எடுத்து நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.