செய்திகள்
நீட் தேர்வு

நீட் முறைகேடு வழக்கு- சிபிஐக்கு மேலும் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்

Published On 2021-03-18 12:23 GMT   |   Update On 2021-03-18 12:23 GMT
பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதுபற்றி அறிக்கை அளிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை:

நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷீத், ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2018 முதல் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடு நடந்துள்ளதா? அதுபற்றி ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதுபற்றி அறிக்கை அளிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கி, வழக்கை மார்ச் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News