செய்திகள்
போலீசார் விசாரணை

வல்லத்தில் சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி?- போலீசார் விசாரணை

Published On 2021-03-18 10:50 GMT   |   Update On 2021-03-18 10:50 GMT
தஞ்சை அடுத்துள்ள வல்லத்தில் சைக்கிளில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று சைக்கிளில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் விழுந்த அவர் மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வல்லம் போலீசார் அந்த நபரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த நபர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சைக்கிளில் சென்றவர் மீது வாகனம் மோதி பலியானாரா? வேறு காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News