செய்திகள்
ஜனாதிபதியை வரவேற்ற ஆளுநர் பன்வாரிலால்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக சென்னை வருகை

Published On 2021-03-09 18:38 GMT   |   Update On 2021-03-09 18:38 GMT
அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகம் வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், டெல்லியிலிருந்து தனி விமானத்தில் கிளம்பிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் ஜனாதிபதியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின், அங்கிருந்து காரில் கவர்னர் மாளிகைக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருவள்ளுவர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்

தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11-ம் தேதி பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் ராம்நாத் கோவிந்த் டெல்லி செல்ல இருக்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News