செய்திகள்
தற்கொலை

கரூர் அருகே தூக்குப்போட்டு சலவை தொழிலாளி தற்கொலை

Published On 2021-03-09 07:32 GMT   |   Update On 2021-03-09 07:32 GMT
கரூர் அருகே தூக்குப்போட்டு சலவை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வடிவேல் நகர் பகுதிக்கு உட்பட்ட சக்தி நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 44). சலவை தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு சங்கரநாராயணம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சங்கரநாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News