செய்திகள்
சிப்காட் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
சிப்காட் அருகே மோட்டார் சைக்கிள் மீது காய்கறி பாரம் ஏற்றிவந்த வேன் மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
பொன்னை அருகே உள்ள வசூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18). இவர் நேற்று முன்தினம் வசூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி, பொன்னை- ராணிப்பேட்டை சாலையில், மோட்டார் சைக்கிளில் நெல்லிகுப்பம் அர்கே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ராணிப்பேட்டை பகுதியில் இருந்து பொன்னை நோக்கி, காய்கறி பாரம் ஏற்றிவந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.