செய்திகள்
விபத்து

வெங்கல் அருகே மினிவேன்-பஸ் மோதல்: டிரைவர் பலி

Published On 2021-03-08 12:51 GMT   |   Update On 2021-03-08 12:51 GMT
வெங்கல் அருகே மினிவேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (வயது 45). சொந்த மினி வேனை வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே வந்த போது, எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மினி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி வேன் கவிழ்ந்ததில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹேமச்சந்திரன் துடி,துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபப்பி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மினி வேன் டிரைவர் ஹேமச்சந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News