செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சர்வதேச மகளிர் தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2021-03-08 05:49 GMT   |   Update On 2021-03-08 05:49 GMT
பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை:

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News