செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள்

பாபநாசம் பகுதியில் மணல் கடத்தல் : 8 லாரிகள் பறிமுதல் - டிரைவர்கள் 8 பேர் கைது

Published On 2021-03-08 02:20 GMT   |   Update On 2021-03-08 02:20 GMT
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் இருந்து லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனையை மேற்கொண்டனர்.
பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் இருந்து லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் உத்தரவின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் விஜயா, அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் அழகாம்பாள், மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அந்தந்த பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாபநாசம் குடமுருட்டி, அய்யம்பேட்டை காவிரி, மெலட்டூர் வெட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். இதில் பாபநாசத்தில் 2 லாரிகளும், அய்யம்பேட்டை மற்றும் மெலட்டூர் பகுதிகளில் தலா 3 லாரிகளும் என 8 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த மாட்டு வண்டிகள் சிலவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News