செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

ஆன்மா சாந்தியடையட்டும்... அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு ஓ.பி.எஸ். இரங்கல்

Published On 2021-03-07 16:15 GMT   |   Update On 2021-03-07 16:15 GMT
அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
சென்னை:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின், மூத்த சகோதரர், முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் (வயது 104) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கலாம் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அன்புச்சகோதரர் மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
Tags:    

Similar News