செய்திகள்
பென்சில்கள் பறிமுதல்

திண்டிவனம் அருகே முதல்-அமைச்சர் படத்துடன் 2,240 பென்சில்கள் பறிமுதல்

Published On 2021-03-07 02:19 GMT   |   Update On 2021-03-07 02:19 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படத்துடன் 3 அட்டை பெட்டிகளில் 2240 பென்சில்கள் இருந்தது.

இதுதொடர்பாக மினிலாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கீழப்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் மகன் திலிபன்(வயது 28) என்பதும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே அதனை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News