செய்திகள்
திண்டிவனம் அருகே முதல்-அமைச்சர் படத்துடன் 2,240 பென்சில்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படத்துடன் 3 அட்டை பெட்டிகளில் 2240 பென்சில்கள் இருந்தது.
இதுதொடர்பாக மினிலாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கீழப்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் மகன் திலிபன்(வயது 28) என்பதும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே அதனை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜான்சிராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படத்துடன் 3 அட்டை பெட்டிகளில் 2240 பென்சில்கள் இருந்தது.
இதுதொடர்பாக மினிலாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கீழப்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் மகன் திலிபன்(வயது 28) என்பதும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே அதனை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.