செய்திகள்
பல்லடத்தில் வேன் மீது கார் மோதல் - டிரைவர் படுகாயம்
தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு, நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பல்லடம்:
பல்லடத்தில் இருந்து பெரும்பாளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு, நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை பல்லடத்தை சேர்ந்த ரவி (வயது 47) என்பவர் ஓட்டிச்சென்றார். கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து ஜவுளி பூங்கா செல்லும் சாலையில் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார், இந்த வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. அதுபோல் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடத்தில் இருந்து பெரும்பாளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு, நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை பல்லடத்தை சேர்ந்த ரவி (வயது 47) என்பவர் ஓட்டிச்சென்றார். கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து ஜவுளி பூங்கா செல்லும் சாலையில் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார், இந்த வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. அதுபோல் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.