செய்திகள்
தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் 85 ஆயிரத்து 134 பேர் முதல் முறையாகவும், 7 ஆயிரத்து 74 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 44-வது நாளாக நேற்று 1,199 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 ஆயிரத்து 208 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 85 ஆயிரத்து 134 பேர் முதல் முறையாகவும், 7 ஆயிரத்து 74 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அந்தவகையில் இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 807 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 31 ஆயிரத்து 301 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 971 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 33 ஆயிரத்து 129 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 62 ஆயிரத்து 604 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் 44-வது நாளாக நேற்று 1,199 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 ஆயிரத்து 208 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 85 ஆயிரத்து 134 பேர் முதல் முறையாகவும், 7 ஆயிரத்து 74 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அந்தவகையில் இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 807 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 31 ஆயிரத்து 301 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 971 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 33 ஆயிரத்து 129 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 62 ஆயிரத்து 604 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.