செய்திகள்
தற்கொலை

அரக்கோணத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-03-05 23:04 GMT   |   Update On 2021-03-05 23:04 GMT
உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் வெங்கடேசபுரம் டிரான்ஸ்பார்மர் தெருவைச் சேர்ந்தவர் மகபூப் பாஷா. இவரின் மனைவி ரசியா பேகம் (வயது 40). இவர், கடந்த சில நாட்களாக உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை உடல் நலப் பாதிப்பு அதிகமாகவே மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை, குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ரசியா பேகம் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News