செய்திகள்
கழுகுமலை- கயத்தாறு பகுதியில் இன்று மின்தடை
கழுகுமலை மற்றும் கயத்தாறு பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கழுகுமலை, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கிராமங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இதேபோல மாதாந்திர பராமரிப்பு காரணமாக விஜயாபுரி, எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் கிராமங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.