செய்திகள்
தற்கொலை

வருசநாடு அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-05 13:12 GMT   |   Update On 2021-03-05 13:12 GMT
வருசநாடு அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு:

வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் வீரணன். இவருடைய மகள் ரோகிணி (வயது 19). கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ரோகிணிக்கு வருசநாடு அருகே உருட்டிமேடு கிராமத்தை சேர்ந்த வல்லரசு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ரோகிணி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனம் உடைந்த ரோகிணி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருசநாடு போலீசார் விரைந்து சென்று ரோகிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரோகிணிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் அவரது சாவு குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகா விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News