செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2021-03-05 10:33 GMT   |   Update On 2021-03-05 10:33 GMT
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியணை:

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டும் பணியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இதனால் குடியிருப்புகள் கட்டும் பகுதியிலேயே தங்கியிருந்து வேலை செய்து வரும் விஜயகுமார், தனக்கு சமையல் செய்து தருவதற்காக, தனது தாயார் லட்சுமி (60) என்பவரை நேற்று திருச்சியில் இருந்து புலியூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கொண்டிருந்தார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியூர் அருகே உப்பிடமங்கலம் செல்லும் சாலை குறுக்கிடும் பகுதியில், அணுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று வேகத்தடையை கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து லட்சுமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News