செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு
மாவட்டத்தில் நோய் பாதிப்பில் இருந்து 15,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 19 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,274 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 19 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,275 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,146 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,274 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 19 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,275 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,146 ஆக உயர்ந்துள்ளது.