செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் தோபியாஸ் (வயது 34)தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தோபியாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோபியாஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.