செய்திகள்
துரைமுருகன்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும்- துரைமுருகன் அறிவிப்பு

Published On 2021-03-04 13:56 GMT   |   Update On 2021-03-04 13:56 GMT
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு, திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை:

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (5-3-2021, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News