செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா

Published On 2021-03-04 01:23 GMT   |   Update On 2021-03-04 01:23 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 18ஆயிரத்து48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 122 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 224 ஆக உள்ளது.
Tags:    

Similar News