சாணார்பட்டி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாணார்பட்டி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
பதிவு: மார்ச் 02, 2021 19:26
தற்கொலை
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் பூங்கோதை (வயது 53). இவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், வீட்டை விட்டு மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் பூங்கோதை உடல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூங்கோதையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உடல்நலக்குறைவால் மனம் உடைந்த பூங்கோதை கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.