செய்திகள்
கொள்ளை

வீடு புகுந்து 15 பவுன் நகை-2 செல்போன்கள் திருட்டு

Published On 2021-03-02 01:23 GMT   |   Update On 2021-03-02 01:23 GMT
ஆவடி அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை-2 செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:

ஆவடியை அடுத்த வீராபுரம் போலாச்சியம்மன் நகரை சேர்ந்தவர் ஞானகணேசன் (வயது 36). தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், வீ்ட்டின் கதவை வெறுமனே சாத்திவிட்டு தூங்கினார். நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 2 செல்போன்களை திருடிவிட்டு, அங்கு தூங்கி கொண்டிருந்த ஞானகணேசன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.

ஆனால் திடுக்கிட்டு எழுந்த ஞானகணேசன், வீட்டுக்குள் திருடன் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். உடனே வீட்டில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர். எனினும் கையில் சிக்கிய 15 பவுன் நகை, 2 செல்போன்களுடன் மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News