செய்திகள்
தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோட்டில் தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம்

Published On 2021-03-01 17:27 GMT   |   Update On 2021-03-01 17:27 GMT
நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருச்செங்கோட்டில் தேர்தல் பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்:

நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருச்செங்கோட்டில் தேர்தல் பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவரும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான விஜய் சரவணன் முன்னிலை வகித்தார். 

சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் சந்துரு, இலக்கிய அணி துணைச்செயலாளரும், வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சின்னதுரை, மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி எவ்வாறு அமைப்பது, தேர்தல் நேரத்தில் என்னென்ன வேலைகள் எப்படி செய்ய வேண்டும் என நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் மந்திரி, மகளிர் அணி துணைச்செயலாளர் செல்லம் பால், கேப்டன் மன்ற செயலாளர் ராஜேந்திரன், மாணவரணி செயலாளர் பூபதி, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் வினோத்குமார், மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் வெங்கடாசலம் மற்றும் கட்சி தொண்டர்கள், மகளிர் அணி மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News