செய்திகள்
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

Published On 2021-03-01 00:54 GMT   |   Update On 2021-03-01 01:03 GMT
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார்.
சென்னை:

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மேலும், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
 
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
Tags:    

Similar News