செய்திகள்
தமிழகத்தில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா தொற்றின் காரணமாக வரும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய பொதுமுடக்கம் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.