செய்திகள்
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது சமத்துவ மக்கள் கட்சி
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இரு கட்சிகள் புதிய கூட்டணியை தொடங்கியுள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய அறிவிப்புகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்க உள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கியதாக அறிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய அறிவிப்புகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்க உள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கியதாக அறிவித்துள்ளன.